Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் போட்டிகளை குறைக்க திட்டம்? – அணி உரிமையாளர்கள் கூட்டத்தில் முடிவு!

Webdunia
ஞாயிறு, 15 மார்ச் 2020 (09:14 IST)
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு இருப்பதால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரை போட்டி எண்ணிக்கையை குறைக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனாவால் இருவர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 102 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மக்கள் ஒரே இடத்தில் அதிகமாக கூடுவதற்கு தடை, வெளிநாடுகளிலிருந்து இந்தியா வர தடை ஆகியவற்றால் ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. ஏப்ரல் 15 வரை விசா தடை இருப்பதால் அதற்கு பிறகு ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ஜூன் முதல் உலகளாவிய கிரிக்கெட் போட்டிகள் தொடங்க இருப்பதால் மே இறுதிக்குள் ஐபிஎல்லை முடிக்க வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது. இதுகுறித்து நேற்று ஐபிஎல் கமிட்டி மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் இன்னமும் 2 அல்லது 3 வாரங்கள் பொறுத்திருந்து பார்க்க ஆலோசித்துள்ளதாக தெரிகிறது. சில வாரங்களில் கொரோனா கட்டுக்குள் வந்து பாதிப்பில்லை என்றால் ஐபிஎல் தொடங்குவது குறித்து யோசிக்கலாம் என்றும், ஏப்ரல் 15க்கு பிறகு நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால் போட்டிகளை குறைப்பது குறித்தும், பார்வையாளர்கள் இன்றி நேரடி ஒளிபரப்பு செய்வது குறித்தும் பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரில் கலக்கிய க்ருனாள் பாண்ட்யாவுக்கு ஆசியக் கோப்பை தொடரில் வாய்ப்பா?

பாலியல் வழக்கில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கைது.. அணியில் இருந்தும் சஸ்பெண்ட்..!

சிஎஸ்கே அணியுடன் இன்னும் 15 ஆண்டுகள் இருப்பேன் – தோனி பேச்சு!

நீங்கள் நம்பர் 1 பவுலராக இருக்கும்போது போட்டியை வென்று கொடுக்க வேண்டும் – பும்ரா குறித்து முன்னாள் வீரர் கருத்து!

என்னை ட்ரேட் செய்யுங்க.. இல்லன்னா ஏலத்தில் விட்டுடுங்க – ராஜஸ்தான் அணிக்கு சஞ்சு கோரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments