Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னையை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன்

Webdunia
சனி, 14 மார்ச் 2020 (21:37 IST)
சென்னையை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன்
ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் இன்று சென்னையின் எப்சி மற்றும் ஏடிகே என்ற கொல்கத்தா அணிக்கும் இடையே நடைபெற்ற நிலையில் இந்த போட்டியில் சென்னை  அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் வென்றது.
 
முதல் பாதியில் 1-0 என்ற முன்னிலையில் இருந்த கொல்கத்தா அணி, ஆட்ட நேர முடிவின்போது 3-1 என்ற கோல் கணக்கில் சென்னையை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து சென்னையின் கோப்பை கனவு தவிடுபொடி ஆயிற்று.
 
இருப்பினும் இருப்பினும் இந்த தொடரின் ஆரம்ப கட்டத்தில் படுமோசமாக விளையாடிய சென்னை அணி, அதன்பின்னர் மீண்டும் சுதாரித்து இறுதிப்போட்டி வரை வந்ததே பெரிய விஷயம் என்று வர்ணனையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments