Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் வர்த்தக மதிப்பு 10 சதவீதம் குறைவு… பின்னணி என்ன?

vinoth
வியாழன், 5 செப்டம்பர் 2024 (08:45 IST)
உலகக் கிரிக்கெட்டின் பணமழைக் கொட்டும் லீக் தொடராக ஐபிஎல் தொடர் உள்ளது. இதில் விளையாட உலகில் உள்ள அனைத்து வீரர்களும் ஆர்வமாக உள்ளனர். ஏனென்றால் ஒரு ஆண்டு முழுவதும் சர்வதேசக் கிரிக்கெட் ஆடி சம்பாதிக்கும் பணத்தை இரண்டே மாதங்களில் ஐபிஎல் விளையாடுவதன் மூலமாக சம்பாதித்து விடுவார்கள்.

இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனுக்குப் பிறகு அடுத்த ஆண்டு மெஹா ஏலம் நடத்தப்பட்டு வீரர்கள் ஏலத்தில் விடுவிக்கப்பட்டு புது அணிகள் உருவாக்கப்பட வேண்டும். ஆனால் சில அணிகள் தக்கவைக்கும் வீரர்களின் எண்ணிக்கையை அதிகமாக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் ஐபிஎல் தொடரின் வர்த்தக மதிப்பு 2023 ஆம் ஆண்டை விட 2024 ஆம் ஆண்டு 10 சதவீதம் அளவுக்குக் குறைந்துள்ளது. இதற்குக் காரணம் ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை ஏலத்தில் எடுத்துள்ள ஸ்டார் மற்றும் வயாகாம் 18 ஆகிய இரு நிறுவனங்களும் ஒன்றாக இணைய இருப்பதுதான் என சொல்லப்படுகிறது. இரு நிறுவனங்கள் ஒன்றால் ஏலத்தின் போது போட்டி இருக்காது என்பதால் இந்த 10 சதவீத சரிவு என சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அஸ்வின், ஜடேஜா அபார பேட்டிங்.. முதல் நாள் முடிவில் இந்தியாவின் ஸ்கோர் எவ்வளவு?

அஸ்வின் சதம், ஜடேஜா அரைசதம்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபரம்..!

உங்களின் அந்த இன்னிங்ஸ்தான் இந்திய வீரர் ஒருவரின் சிறந்த இன்னிங்ஸ்… கம்பீர் புகழாரம்!

சேப்பாக்கம் டெஸ்ட்: வங்கதேசம் பந்துவீச்சு! 634 நாட்களுக்கு பின் களமிறங்கும் ரிஷப் பண்ட்!

Chess Olympiad: 7 சுற்றிலும் தொடர் வெற்றி.. தங்கத்தை நோக்கி இந்திய தங்கங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments