ஐபிஎல் ப்ளே ஆஃப், இறுதி போட்டி எங்கே நடக்கும்? – சவுரவ் கங்குலி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 24 ஏப்ரல் 2022 (09:15 IST)
நடப்பு ஆண்டு ஆண்டு ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் மற்றும் இறுதி சுற்று போட்டிகள் நடைபெறும் இடங்களை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. ஐபிஎல்லின் ஜாம்பவான் அணிகள் தரவரிசையில் பின் தங்கியுள்ள நிலையில் புதிய அணிகள் சிறப்பாக விளையாடி வருகின்றன.

இந்நிலையில் ஐபிஎல் போட்டியின் ப்ளே ஆஃப் மற்றும் இறுதி போட்டியை எங்கே நடத்துவது என்பது குறித்து நேற்று ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பின்னர் அதுகுறித்து அறிவித்துள்ள பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி முதலாவது தகுதி சுற்று மே 24ம் தேதியும், வெளியேற்றுதல் சுற்று மே 26ம் தேதியும் கொல்கத்தா ஈடன் கார்டனில் நடைபெறும் என்றும், இறுதி போட்டிக்கான இரண்டாவது தகுதி சுற்று மே 27ம் தேதியும், இறுதி போட்டி மே 29ம் தேதியும் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அதிரடி வெற்றி: 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை கைப்பற்றியது!

திடீரென இன்ஸ்டாவிலிருந்து வெளியேறிய விராட் கோலி.. அனுஷ்காவிடம் காரணம் கேட்கும் ரசிகர்கள்..!

இந்தியாவுக்கு எதிரான 4வது டி20 போட்டி.. நியூசிலாந்து அபார வெற்றி..!

சூதாட்ட புகார் எதிரொலி.. முக்கிய கிரிக்கெட் வீரருக்கு ஐசிசி தடை.. 14 நாட்களுக்குள் விளக்கம் தர உத்தரவு..!

மகளிர் ஐபிஎல் போட்டியில் முதல் சதம்.. உலக சாதனை செய்த வீராங்கனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments