Publish Date: Mon, 25 Apr 2022 (23:34 IST)
Updated Date: Mon, 25 Apr 2022 (23:38 IST)
ஐபிஎல் -15 வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்று பஞ்சாப்புக்கு எதிராக போட்டியில் சென்னை கிங்ஸ் தோற்றது.
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் ஜடேஜா பவுலிங் தேர்வு செய்தார்.
எனவே கேப்டன் மயங்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்ததது.
இதில், மயங்க் அகர்வால் 18 ரன்களும், ஹிகர் தவான் 88 ரன்களும்,, ராஜபக்ஷா 42 ரன்களும், லிவிங்ஸ்டன் 19 ரன்களும், அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்து, சென்னை அணிக்கு 188 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த சென்னை கிங்ஸ் அணியில் ராயுடு 78 ரன்களும், ஜெய்வட் 30 ரன்களும் , ஜேடேஜா 21 ரன்களும் அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு சென்னை அணி 176 ரன்கள் மட்டுமே எடுத்தது.
எனவே, பஞ்சாப் அணி 11 ரன் கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.