Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (23:37 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இருபத்தி மூன்றாவது போட்டி இன்று மும்பை  மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ததால், பஞ்சாப் அணி முதலில்  பேட்டிங் செய்தது.

இதில், மயங்க் அகர்வால் 52 ரன்களும், தவான் 70 ரன்களும்,  பாரிட்ஷா 12 ரன்களும், ஷர்மா 30 ரன்களும்,  ஷாருக்கான் 15 ரன்களும் அடித்து, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் அடித்து            மும்பை அணிக்கு 199 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங்கில் களமிறங்கிய மும்பை அணியில், பிரீவிஸ் 49 ரன் களும், சூர்யகுமார் 43 ரன்களும், வர்மா 36 ரன் களும் அடித்து, 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்தனர்.

எனவே, பஞ்சாப் அணி 12 ரன்கள்  வித்தியாசத்தில்             மும்பையை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அடுத்த கட்டுரையில்
Show comments