Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; சென்னை சூப்பர் கிங்ஸ் பந்து வீச்சு தேர்வு

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (19:17 IST)
15 வது ஐபிஎல் தொடர் தற்போது நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் சிங்கிற்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் விளையாடுகிறது.

2022 ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றது. ஐபிஎல் போட்டி என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளின் ஆட்டங்கள் மிகவும் பரபரப்பாக இருக்கும்.

தற்போதைய சீசனில் இரண்டு அணிகளுமே தரவரிசை கடைசியில் உள்ளன. 6 போட்டிகளில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 1 போட்டியில் வென்றுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி 6 போட்டிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளது.

இந்நிலையில் இன்று இந்த இரண்டு அணிகளுக்கிடையே நடைபெற உள்ள போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சென்னை அணியின் பந்து வீச்சாளர் ஆடம் மில்னே காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை என்று செய்திகள் வெளியானது.

தற்போது இரு அணி வீரர்களும் மைதானத்திற்கு வந்த நிலையில் சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா டாஸ் வென்று, பவுலிங் தேர்வு செய்துள்ளார். எனவே   மும்பை அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு ‘டெண்டுல்கர்-ஆண்டர்சன்’ கோப்பை எனப் பெயர் மாற்றம்?

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments