Publish Date: Wed, 30 Mar 2022 (23:36 IST)
Updated Date: Wed, 30 Mar 2022 (23:39 IST)
15 வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்றுள்ளது.
இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.
எனவே, கேப்டன் ஷேரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது.
இதில், 18.5 ஓவர்களில் கொல்கத்தா அணி 128 ரன்கள் அடித்து பெங்களூர் அணிக்கு 129 ரன் கள் வெற்றி இலக்கான நிர்ணயித்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த பெங்களூர் அணியில், விராட் கோலி 12 ரன்களும், டேவிட் வேலி 18 ரன்களும், ரூதர் போர்ட் 28 ரன்களும், அஹமத் 27 ரன்களும், தினேஷ் 14 ரன்களும் அடித்தனர்.
எனவெ பெங்களூர் அணி 19.2 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 132 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது.