Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

”தோனியை போல் ஒரு வீரரை மிஸ் செய்கிறோம்..” மனம் திறக்கும் குல்தீப் யாதவ்

”தோனியை போல் ஒரு வீரரை மிஸ் செய்கிறோம்..” மனம் திறக்கும் குல்தீப் யாதவ்

Arun Prasath

, வெள்ளி, 6 மார்ச் 2020 (14:02 IST)
தோனிக்கு அனுபவம் மிகவும் அதிகம், அவரை இந்திய அணி மிஸ் செய்கிறது என குல்தீப் யாதவ் தெரிவித்துள்ளார்.

வருகிற மார்ச் மாதம் 29 ஆம் தேதி, 13 ஆவது ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதினர். இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை அணியின் கேப்டனுமாகிய தோனி பல மாதங்களாக கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக்கொள்ளாத நிலையில், இந்த ஐபிஎல் போட்டிகளில் விளையாடவுள்ளார்.
webdunia

இந்நிலையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், “விக்கெட் கீப்பரில் கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஆனால் தோனியின் அனுபவத்தை இந்திய அணி மிஸ் செய்து வருகிறது. அவர் அனுபவம் மிகப் பெரியது. அவர் இந்திய அணிக்கு நிறைய கொடுத்திருக்கிறார். அது போன்ற ஒரு வீரர் நிச்சயமாக விளையாடாதபோது நீங்கள் அவர் இல்லாததை உணர்வீர்கள்” என மனம் திறந்து கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் அணிக்குள் வரவேண்டுமா… அப்போ இதை செய்யுங்கள் – டிவில்லியர்ஸுக்கு பவுச்சர் நிபந்தனை !