Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெற்றியின் அருகில் இந்தியா - இங்கிலாந்துக்கு 405 ரன்கள் இலக்கு

வெற்றியின் அருகில் இந்தியா - இங்கிலாந்துக்கு 405 ரன்கள் இலக்கு
, ஞாயிறு, 20 நவம்பர் 2016 (15:30 IST)
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 405 ரன்கள் வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது.


இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 455 எடுத்து ஆல் அவுட் ஆனது. கேப்டன் விராட் கோலி 167 ரன்களும், சத்தீஸ்வர் புஜாரா 119 ரன்களும், அஸ்வின் 58 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆண்டர்சன், மொய்ன் அலி தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

பின்னர், முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி 255 ரன்களுக்கு இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பென் ஸ்டோக்ஸ் 70 ரன்களிலும், பைர்ஸ்டொ 53 ரன்களிலும் வெளியேறினர். அடில் ரஷித் 32 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

200 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸில் 204 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகப்பட்சமாக 81 ரன்களும், ஜெயந்த் யாதவ் 27 ரன்களும், ரஹானே 21 ரன்களும் எடுத்தனர்.

இங்கிலாந்து தரப்பில் ஸ்டூவர்ட் பிராட் மற்றும் அடில் ரஷித் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதனால், இங்கிலாந்து அணிக்கு 405 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளது. கடின இலக்கை வெற்றிப்பிடிப்பது சிரமம் என்பதால், இந்தியா வெற்றிபெற அதிக வாய்ப்பிருப்பதாக விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஸ்வின் மாய சுழலில் சிக்கி சிதைந்தது இங்கிலாந்து - இந்தியா 200 ரன்கள் முன்னிலை