Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று நான்காவது டி 20 போட்டி… தொடரை வெல்லுமா இந்தியா?

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2023 (07:31 IST)
இந்தியாவில் 5 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது ஆஸ்திரேலிய அணி. இரு அணிகளிலுமே முக்கிய வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்கள் மட்டுமே விளையாடினாலும், இதுவரை நடந்த போட்டிகள் அனைத்தும் விறுவிறுப்பாக அமைந்தன.

இதுவரை நடந்த மூன்று போட்டிகளில் இந்திய அணி 2 போட்டிகளையும் ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியையும் வென்றுள்ளது. இன்று நான்காவது போட்டி ராய்ப்பூரில் நடக்க உள்ளது.

இந்நிலையில் கடந்த 3 போட்டிகளில் இந்திய அணியில் இடம்பெறாத ஸ்ரேயாஸ் ஐயர் இன்றைய போட்டியில் களம் காண்கிறார். அதனால் அவருக்காக எந்த வீரர் பென்ச்சில் உட்காரவைக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய அணியில் கிளன் மேக்ஸ்வெல் தாயகம் திரும்பியுள்ளதால் அந்த அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இன்றைய போட்டியை இந்திய அணி வென்றால் தொடரை வெல்லும் என்பதால் கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அது சஹாலோட ஐடியாதானே… ரோஹித்தின் ஸ்டைல் வாக் குறித்து கேட்ட பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments