Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

4 விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா… ரிஷப்& ஸ்ரேயாஸ் நிதானம்!

4 விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா… ரிஷப்& ஸ்ரேயாஸ் நிதானம்!
, வெள்ளி, 23 டிசம்பர் 2022 (12:35 IST)
இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டாக்காவில் இப்போது நடந்து வருகிறது.

நேற்று தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்துவந்த பங்களாதேஷ் அணி 227 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

இந்திய அணி சார்பில் உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினர். வங்கதேச பேட்ஸ்மேன் மோமினல் அதிகபட்சமாக 84 ரன்கள் சேர்த்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் நான்கு பேரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். இப்போது ரிஷப் பண்டும் ஸ்ரேயாஸ் ஐயரும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 4 விக்கெட்களை இழந்து 137 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹர்திக் பாண்ட்யா மற்றும் சூர்யகுமாருக்கு பிசிசிஐ கொடுக்கும் ப்ரமோஷன்!