Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரன் மழை பொழிந்த சூர்யகுமார் யாதவ்! - ஜிம்பாப்வே அணிக்கு 187 ரன்கள் இலக்கு!

suryakumar yadav
, ஞாயிறு, 6 நவம்பர் 2022 (15:25 IST)
தற்போது நடந்து வரும் உலகக்கோப்பை டி20 போட்டியின் லீக் சுற்று இறுதி ஆட்டத்தில் இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதி வருகின்றன.

இந்த ஆண்டிற்கான உலகக்கோப்பை டி20 போட்டிகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகின்றன. க்ரூப் 1 ல் விளையாடிய நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளும், க்ரூப் 2ல் விளையாடிய பாகிஸ்தான் அணியும் அரையிறுதி போட்டிகளுக்கு முன்னேறியுள்ளன.

லீக் போட்டியின் கடைசி ஆட்டத்தில் இன்று இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் மோதி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்களை குவித்துள்ளது.

ரோகித் சர்மா 15 ரன்கள், விராட் கோலி 26 ரன்களில் வெளியேறினாலும், கே.எல்.ராகுல் 35 பந்துகளில் 51 ரன்கள் அடித்து ஸ்கோர் நிலவரத்தை சமாளித்து வந்தார். நான்காவதாக இறங்கிய சூர்யகுமார் யாதவ் 25 பந்துகளில் 6 பவுண்டரிகள், 4 சிக்ஸர்களை விளாசி 61 ரன்களை குவித்து அணியின் ரன் ரேட்டை உயர்த்தினார்.

அடுத்ததாக 187 ரன்கள் என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்குகிறது. இந்தியா தனது பீல்டிங்கால் அவர்களை முறியடிக்குமா என எதிர்பார்க்கபடுகிறது.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியா பேட்டிங்: கே.எல்.ராகுல் அபார அரைசதம், ஆனாலும் அடுத்தடுத்து 2 விக்கெட்டுக்கள்: