Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மெரினா, பெசண்ட் நகர் பீச்களில் இந்தியா பாகிஸ்தான் போட்டி நேரடி ஒளிரப்பு!

Advertiesment
இந்தியா

vinoth

, ஞாயிறு, 23 பிப்ரவரி 2025 (09:32 IST)
கடந்த 19 ஆம் தேதி தொடங்கிய சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டி இன்று நடக்கிறது. இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் விளையாடியுள்ளன. இந்தியா வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் நியுசிலாந்துக்கு எதிரான போட்டியில் தோற்றுள்ளது.

இதனால் இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் தோற்றால் பாகிஸ்தான் தொடரை விட்டே வெளியேற வேண்டிய சிக்கல் எழும். இந்நிலையில் இன்றைய போட்டியைக் காண உலகக் கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலாகக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டுத் துறை இந்த போட்டியின் நேரடி ஒளிபரப்பை சென்னை மெரினா மற்றும் பெசண்ட் நகர் கடற்கரைகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யவுள்ளது. இதையடுத்து இன்று பீச்களில் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடிக்க வேண்டும்.. ஏன் என்றால்? - இந்திய முன்னாள் வீரர் கருத்து!