Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறப்பான தொடக்கம் அமைந்தும் சறுக்கிய இந்திய பேட்ஸ்மேன்கள்!

சிறப்பான தொடக்கம் அமைந்தும் சறுக்கிய இந்திய பேட்ஸ்மேன்கள்!
, வெள்ளி, 25 நவம்பர் 2022 (09:28 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் இன்று முதல் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஆரம்பம் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று ஆக்லாந்து மைதானத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்கியது. இன்றைய போட்டியில் நியூசிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகார் தவான் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களம் இறங்கினர். இவர்கள் இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து சிறப்பான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தனர். தவான் 72 ரன்களிலும்,  கில் 50 ரன்களிலும் அவுட் ஆகி வெளியேற, அடுத்து வந்த ரிஷப் பண்ட் 15 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

இதையடுத்து இந்திய அணி தற்போது  162 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்களை இழந்து விளையாடி வருகிறது. களத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் களத்தில் விளையாடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒருத்தன் வந்தா படை நடுங்கும்! மாஸ் காட்டிய ரொனால்டோ! – புதிய சாதனை!