Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொதப்பும் டாப் ஆர்டர் பேட்டிங்.. மளமளவென விழுந்த 3 விக்கெட்கள்!

vinoth
திங்கள், 16 டிசம்பர் 2024 (08:04 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகிய இருவரின் அபார சதத்தால் ஆஸ்திரேலிய அணி 445 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம்  மழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில் நேற்று சிறப்பாக விளையாடிய ஆஸி ரன்களை அதிரடியாக சேர்த்தது.

இதையடுத்து தற்போது தங்கள் இன்னிங்ஸை ஆடிவரும் இந்திய அணி அடுத்தடுத்து மூன்று தொடக்க ஆட்டக்காரர்களின் விக்கெட்களை இழந்துள்ளது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஜெய்ஸ்வால், கில் மற்றும் கோலி ஆகியோர் ஒற்றை இலக்க எண்களில் ஆட்டமிழந்தனர்.

தற்போது கே எல் ராகுல் 13 ரன்களோடு களத்தில் இருக்க உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டுள்ளது. பின் வரிசை பேட்ஸ்மேன்களாவது நிலைத்து நின்று இந்திய அணியைத் தேற்றுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments