Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

6 விக்கெட்களை இழந்த இந்தியா… முதல் நாள் ஆட்டம் முடிவு!

Advertiesment
6 விக்கெட்களை இழந்த இந்தியா… முதல் நாள் ஆட்டம் முடிவு!
, புதன், 14 டிசம்பர் 2022 (16:47 IST)
இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் அணிகள் இடையே இன்று முதலாவது டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் முதல்நாள் ஆட்டம் முடிவுற்றுள்ளது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு செய்ததை அடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக கேஎல் ராகுல் மற்றும் கில் களமிறங்கினார்கள். ஆனால் அடுத்தடுத்து தொடக்க ஆட்டக்காரர்கள் 2 விக்கெட்டுகள் மளமளவென விழுந்து விட்டதை அடுத்து விராட் கோலி ஒரே ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

அதன் பின்னர் புஜாராவும் ஸ்ரேயாஸ் ஐயரும் ஜோடி சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய புஜாரா 90 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசி வரை ஆட்டம் இழக்காத் ஸ்ரயாஸ் ஐயர் 82 ரன்களோடு களத்தில் உள்ளார்.

இன்றைய முதல் நாள் ஆட்டமுடிவில் இந்திய அணி 6 விக்கெட்களை இழந்து 278 ரன்களை சேர்த்துள்ளது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்தடுத்து 3 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா. வங்கதேசம் அபார பவுலிங்!