Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்திய வீரர்களை லெஃப்ட் ரைட் வாங்கிய ஆஸ்திரேலியா அரசு!!

இந்திய வீரர்களை லெஃப்ட் ரைட் வாங்கிய ஆஸ்திரேலியா அரசு!!
, செவ்வாய், 5 ஜனவரி 2021 (10:29 IST)
குயின்ஸ்லேண்ட் மாகாணத்தின் சுகாதரத்துறை அமைச்சர் ரோஸ் பேட்ஸ் இந்திய வீரர்களை கடுமையாக சாடியுள்ளார். 

 
இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான சுற்றுப்பயண ஆட்டங்கள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதுவரை இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்துள்ள நிலையில் 1-1 என்ற நிலையில் இரு அணிகளும் சம நிலையில் உள்ளன. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் வரும் 7 ஆம் தேதி மெல்போர்னில் தொடங்க உள்ளது.
 
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் கொரோனா விதிகளை மீறி வெளியாட்களுடன் தொடர்பு கொண்டதால் சர்ச்சை வெடித்தது. இதனிடையே நான்காவது டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள குயின்ஸ்லேண்ட் மாகாணத்தின் சுகாதரத்துறை அமைச்சர் ரோஸ் பேட்ஸ், கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்க முடியாது எனில் இந்திய வீரர்கள் விளையாட வர வேண்டாம் என சாடியுள்ளார். இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயிற்சியில் ஈடுபட்ட கே.எல்.ராகுலுக்கு காயம்! – டெஸ்ட் தொடரிலிருந்து விலகல்!