Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனி மாதம்தோறு கிரிக்கெட் வீரர்களுக்கு விருது… ஐசிசி அறிவிப்பு!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (12:06 IST)
சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு இனி மாதம்தோறும் விருது வழங்க ஐசிசி முடிவு செய்துள்ளது.

சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இப்போது புதிய முன்னெடுப்பாக இனிமேல் விருதுகளை மாதம் தோறும் வழங்க உள்ளது.

இதற்கான வீரர்கள் பரிந்துரையை ரசிகர்கள் ஆன்லைன் மூலமாக செய்யலாம் என அறிவுறுத்தியுள்ளது. இந்த விருதுகள் மாதம்தோறும்  முதல் திங்கள் கிழமை அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் விருதுக்காக இந்திய அணியைச் சேர்ந்த ரிஷப் பண்ட், அஸ்வின், நடராஜன் மற்றும் சிராஜ் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments