Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹால் ஆஃப் ஃபேம் விருது பெற்ற சச்சின் – கௌரவப்படுத்திய ஐசிசி

Webdunia
வெள்ளி, 19 ஜூலை 2019 (15:46 IST)
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளை பாராட்டி உயரிய விருதான “ஹால் ஆஃப் ஃபேம்” விருதை வழங்கி கௌரவித்துள்ளது ஐசிசி.

உலக கிரிக்கெட் வரலாற்றில் புறக்கணிக்க முடியாத கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர். 90களின் இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மட்டையை எடுத்து கொண்டு வீதிக்கு வந்ததற்கு சச்சின் முக்கியமான காரணம். 100 முறை சதம் அடித்து உலக சாதனை படைத்தவர் சச்சின்.

மேலும் பல சாதனைகளை படைத்த சச்சின் தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் செயல்பாடுகள் மற்றும் வீரர்களின் விளையாட்டு திறன் குறித்த தனது கருத்துகளை கூறி வருகிறார். சச்சினின் கடந்த கால சாதனைகள் இந்திய அணியை உலக கிரிக்கெட் தரவரிசையில் முக்கியமான இடத்திற்கு கொண்டு சென்றது. அவரின் இந்த சாதனைகளை பெருமைப்படுத்தும் விதமாக ஐசிசி வழங்கும் உயரிய விருதான “ஹாக் ஆஃப் ஃபேம்” விருதை சச்சினுக்கு வழங்கியுள்ளது. மேலும் முன்னாள் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஆலம் டோனல்டுக்கும், ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் வீராங்கனை கேத்ரின் ஃபிட்ஸ்பாட்ரிக் ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் “ஹால் ஆஃப் ஃபேம்” வாங்கும் வீரர்களில் சச்சின் ஆறாவது நபர். இதற்கு முன்னரே பிஷன் சிங், கபில் தேவ், கவாஸ்கர், அனில் கும்ப்ளே, ராகுல் ட்ராவிட் ஆகியோர் இந்த விருதினை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு ‘டெண்டுல்கர்-ஆண்டர்சன்’ கோப்பை எனப் பெயர் மாற்றம்?

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

TNPL 2025: முதல் போட்டியிலேயே கோவையை பந்தாடிய திண்டுக்கல் ட்ராகன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments