Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் போடும் முறை தொடரும்: ஐசிசி முடிவு!

Webdunia
புதன், 30 மே 2018 (15:26 IST)
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் போடும் முறை தொடரும் என ஐசிசி கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்துள்ளது.
 
கிரிக்கெட் போட்டியின் போது எந்த அணி பேட் செய்ய வேண்டும் எந்த அணி பவுல் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய பல காலமாக டாஸ் போட்டு வருவது வழக்கமானது. 
 
ஆனால், தற்போது போட்டிக்கு முன்னர் இனி ஏன் டாஸ் போட வேண்டும் என்பது போல டாஸ் நடைமுறைக்கு முற்றுபுள்ளி வைக்க ஐசிசி தீவிர ஆலோசனை செய்து வந்தது.
 
இந்த நிலையில் நேற்று நடந்த ஐசிசி ஆலோசனை கூட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் டாஸ் போடும் முறை தொடரும் என முடிவு செய்யப்பட்டது.
 
மேலும், பேட்டிங் மற்றும் பவுலிங்குக்கு கைகொடுக்கும் வகையில் ஆடுகளம் தயாரிக்கப்பட வேண்டும் என்றும், போட்டியின் போது வீரர்கள் விதிமுறைகளை மீறி செயல்பட்டால் அவர்களுக்கு தண்டனையை அதிகப்படுத்த வேண்டும் என்றும் முடிவுகள் எடுக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

எளிதாக ப்ளே ஆஃப் சென்ற SRH… ஆர் சி பி& சி எஸ் கே அணிகளுக்கு வாழ்வா சாவா போட்டி!

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

அடுத்த கட்டுரையில்
Show comments