Webdunia - Bharat's app for daily news and videos

Install App

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

Prasanth Karthick
ஞாயிறு, 30 மார்ச் 2025 (13:24 IST)

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவும், சாய் கிஷோரும் முறைத்துக் கொண்ட நிலையில் அதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

 

நேற்று ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதிக் கொண்ட நிலையில் 196 ரன்களை குவித்த குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 160 ரன்களை மட்டுமே எடுத்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது மும்பை இந்தியன்ஸ்.

 

இந்த போட்டியில் 15வது ஓவரில் குஜராத் அணி பந்து வீச்சாளர் சாய் கிஷோர் பந்துவீசிய போது, மும்பை கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கும் அவருக்கும் மோதல் எழுந்து ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டனர்.

 

இது மைதானத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுகுறித்து சாய்கிஷோரே விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் “ஹர்திக் பாண்ட்யா எனது நல்ல நண்பர். ஆனால் களம் என்று வந்துவிட்டால் நாங்கள் இப்படிதான் இருப்போம். எதிரணியை சேர்ந்தவர்கள் நண்பராக இருந்தாலும் கூட இப்படிதான் போட்டி போட்டுக்கொள்வேன். ஆனால் இதை நாங்கள் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்ள மாட்டோம். எல்லாம் போட்டியின் ஒரு பகுதிதான்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments