Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மொத்த மைதானத்தையும் அமைதி ஆக்கி காட்டுவேன்! – சொன்னதை செய்த பேட் கம்மின்ஸ்!

Webdunia
ஞாயிறு, 19 நவம்பர் 2023 (16:39 IST)
தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை இறுதி போட்டியில் தான் சொன்னபடியே மைதானத்தை அமைதி ஆக்கி காட்டியுள்ளார் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ்.



இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உலக கோப்பை இறுதி போட்டி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சில் இந்தியா அடுத்தடுத்து தனது விக்கெட்டுகளை இழந்துள்ளது. விராட் கோலி நிதானமாக விளையாடி ஒரு அரைசதம் வீழ்த்தி ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் வீசிய பந்து கோலியின் பேட் எட்ஜில் பட்டு ஸ்டம்ப்பில் அடிக்க விக்கெட் இழந்தார் விராட் கோலி. விராட் கோலியின் விக்கெட் போன அந்த சமயம் மொத்த க்ரவுண்டுமே கனத்த மௌனத்தில் ஆழ்ந்தது. போட்டிக்கு முன்னர் “மைதானத்தில் உள்ள 1.30 லட்சம் ரசிகர்களையும் அமைதிப்படுத்துவதே எங்கள் நோக்கம்” என்று சொன்ன பேட் கம்மின்ஸ், விராட் கோலி விக்கெட் மூலமாக அதை நிகழ்த்திவிட்டார்.

ஆனால் இது நிரந்தரமான மௌனமாக இருக்காது என்றும் இந்தியா தனது திறமையான பதிலடியால் வெற்றியை கைகொள்வார்கள் என்றும் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவிற்கு வரும் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி: பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

ஆசியக் கோப்பைத் தொடரில் இவர்கள் இருவரும் இல்லை.. வெளியான லேட்டஸ்ட் தகவல்!

இதனால்தான் ரிஷப் பண்ட்டுக்கு டெஸ்ட் கேப்டன் பதவி கொடுக்கப்படவில்லையா?... வைரலாகும் தகவல்!

பொறுப்புக் கொடுத்தால் எப்படி செயல்பட வேண்டுமென நிரூபித்துவிட்டார்- கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் !

ஒரு நாள் போட்டிகளிலும் ஓய்வா?... ரோஹித் ஷர்மா அளித்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments