மொத்த மைதானத்தையும் அமைதி ஆக்கி காட்டுவேன்! – சொன்னதை செய்த பேட் கம்மின்ஸ்!

Webdunia
ஞாயிறு, 19 நவம்பர் 2023 (16:39 IST)
தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை இறுதி போட்டியில் தான் சொன்னபடியே மைதானத்தை அமைதி ஆக்கி காட்டியுள்ளார் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ்.



இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான உலக கோப்பை இறுதி போட்டி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சில் இந்தியா அடுத்தடுத்து தனது விக்கெட்டுகளை இழந்துள்ளது. விராட் கோலி நிதானமாக விளையாடி ஒரு அரைசதம் வீழ்த்தி ஆட்டமிழந்தார்.

ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் வீசிய பந்து கோலியின் பேட் எட்ஜில் பட்டு ஸ்டம்ப்பில் அடிக்க விக்கெட் இழந்தார் விராட் கோலி. விராட் கோலியின் விக்கெட் போன அந்த சமயம் மொத்த க்ரவுண்டுமே கனத்த மௌனத்தில் ஆழ்ந்தது. போட்டிக்கு முன்னர் “மைதானத்தில் உள்ள 1.30 லட்சம் ரசிகர்களையும் அமைதிப்படுத்துவதே எங்கள் நோக்கம்” என்று சொன்ன பேட் கம்மின்ஸ், விராட் கோலி விக்கெட் மூலமாக அதை நிகழ்த்திவிட்டார்.

ஆனால் இது நிரந்தரமான மௌனமாக இருக்காது என்றும் இந்தியா தனது திறமையான பதிலடியால் வெற்றியை கைகொள்வார்கள் என்றும் ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சுப்மன் கில்லுக்கு ஏன் துணை கேப்டன் பதவி.. சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவது ஏன்?

ஸ்மிருதி மந்தனா திருமணம் ரத்தானதற்கு பெண் நடன இயக்குநர் காரணமா? தீயாய் பரவும் வதந்தி..!

ஓய்வு முடிவை திரும்பப் பெற்றார் வினேஷ் போகத் : 2028 ஒலிம்பிக்ஸில் மீண்டும் களம் காண்கிறாரா?

8 பவுண்டரிகள், 14 சிக்ஸர்கள்.. 85 பந்துகளில் 163 ரன்கள்.. U19 ஆசிய கோப்பையில் வைபவ் சூர்யவம்சி விளாசல்..!

காம்பீர் செய்த மிகப்பெரிய தவறு.. சூர்யகுமார் யாதவ் பேட்டிங் வரிசை குறித்து விமர்சனம்...!

அடுத்த கட்டுரையில்
Show comments