Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எப்படி இருக்கிறார் சவுரவ் கங்குலி..? – மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்!

எப்படி இருக்கிறார் சவுரவ் கங்குலி..? – மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்!
, செவ்வாய், 28 டிசம்பர் 2021 (15:40 IST)
பிசிசிஐ தலைவர் கங்குலி கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல்நலம் குறித்து மருத்துவமனை விளக்கம் அளித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் மெல்ல குறைந்து வரும் நிலையில் ஒமிக்ரான் வேரியண்ட் பாதிப்புகள் அதிகரித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் பிசிசிஐ தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான சவுரவ் கங்குலிக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதனால் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் கங்குலி அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கங்குலியின் உடல்நலம் குறித்து மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் “பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலிக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர் நேற்று மாலை சிகிச்சைக்காக உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. தற்போது அவருக்கு ‘மோனோ க்ளோனல் ஆன்டிபாடி காக்டெய்ல் தெரபி” என்னும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதல் ஓவரிலேயே விக்கெட் வேட்டையை தொடங்கிய பும்ரா!