ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு தக்க வைக்கப்பட்ட வீரர் என்ற சாதனையைப் படைத்த ஹென்ரி கிளாசன்!

vinoth
வெள்ளி, 1 நவம்பர் 2024 (08:17 IST)
ஐபிஎல் அடுத்த சீசனுக்கு ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களைத் தக்கவைக்கலாம் என்ற புதிய விதிகளை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. அதன்படி ஒரு அணி அதிகபட்சமாக 6 வீரர்கள் வரை தக்கவைத்துக் கொள்ளலாம். அதில் அதிகபட்சமாக 5 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்களாக இருக்கலாம். அதே போல அன்கேப்ட் வீரர்களாக அதிகபட்சம் 2 பேர் இருக்கலாம்.

இதையடுத்து நேற்று அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் அதிக தொகைக்கு தக்கவைக்கப்பட்ட வீரராக சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர் ஹென்ரிச் கிளாசன் 23 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டுள்ளார். இதுவரை எந்தவொரு வீரரும் இவ்வளவு தொகைக்கு தக்கவைக்கப்பட்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு அடுத்த இடத்தில் விராட் கோலி மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் 21 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

201 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா… ஃபாலோ ஆன் கொடுக்காத தென்னாப்பிரிக்கா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சாதனை: அரைசதத்தில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்!

தென்னாப்பிரிக்கா அபார பந்துவீச்சு.. 7 விக்கெட்டுக்களை இழந்த இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகிவிடுமா?

40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடர்: கேப்டனாக கே.எல். ராகுல்; மீண்டும் அணியில் ருதுராஜ் !

அடுத்த கட்டுரையில்
Show comments