Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அணியில் அந்த வீரரை எடுங்கள்.. சிஎஸ்கே அணிக்கு அறிவுரை சொன்ன தோனி!

vinoth
வியாழன், 31 அக்டோபர் 2024 (15:12 IST)
அடுத்த சீசனில் சிஎஸ்கே அணி ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். அது தோனியை சிஎஸ்கே நிர்வாகம் தக்கவைக்குமா என்பதைதான்!. அதற்குக் காரணம் தோனிக்கு தற்போது 42 வயதாகிறது. அவரை மிகப்பெரிய தொகை கொடுத்து தக்கவைத்தாலும், அடுத்த மூன்று சீசன்களையும் விளையாடுவார் என்று சொல்ல முடியாது. ஆனால் அன்கேப்ட் ப்ளேயர் விதியால் தோனி அடுத்த சீசனில் விளையாடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இந்நிலையில்தான் தான் தூதுவராக இருக்கும் சாப்ட்வேர் ஒன்றின் அறிமுக நிகழ்வில் தோனி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் “43 வயதாகும் என்னால் இன்னும் ஐபிஎல் விளையாட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. என்னால் இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட முடியும் என தோன்றுகிறது. கடந்த 9 மாதங்களாக நான் ஃபிட்டாக இருந்து வருகிறேன். அதனால் இரண்டரை மாதங்கள் கிரிக்கெட் விளையாடுவது எனக்குக் கடினமானது இல்லை” எனக் கூறியுள்ளார்.

ஆனாலும் தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் தொடர்ந்து விளையாடுவார் என்பது அனைவருக்கும் எழும் கேள்விதான். அதனால் தோனிக்குப் பிறகு சி எஸ் கே அணிக்கு ஒரு நீண்டகால கீப்பரும் பேட்ஸ்மேனும் தேவைப்படுகிறார். அதனால் இந்த ஆண்டு மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்டை எப்படியாவது சிஎஸ்கே அணியில் எடுக்க சொல்லி தோனி, அணி நிர்வாகிகளுக்கு அறிவுரை கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments