Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகில் அதிக கேட்சுகள் விட்டவர் இவர்தான் - ரிக்கி பாண்டிங் குற்றச்சாட்டு

Advertiesment
Ricky Ponting
, வியாழன், 7 ஜனவரி 2021 (17:48 IST)
சிட்னியில் தொடங்கி நடந்துவரும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் இரண்டு கேட்ச்களை தவற விட்டுள்ளார். இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான பாண்டிங் விமர்சித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது என்பதும் ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகிறது .

இன்று காலை சிட்னியில் மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கிய நிலையில் மழையால் சிறிதுநேரம் பாதிக்கபப்ட்ட ஆட்டம் பின்னர் தொடங்கியது.

இந்த போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் மிகவும் மோசமாக இருந்தது. அஸ்வின் ஓவரில் ஒரு கேட்ச்சையும் சிராஜ் ஓவரில் ஒரு கேட்ச்சையும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் கோட்டை விட்டதால் இந்திய அணிக்கு பாதகமாக அமைந்தது.
webdunia

இதுகுறித்து இதுகுறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டனும் வர்ணனையாளருமான பாண்டிங் கூறியுள்ளதாவது:

ரிஷப் பண்ட் அறிமுகம் ஆன காலக்கட்டத்தில் இருந்து பார்த்தோமேயானால் மற்ற விக்கெட் விக்கெட் கீப்பர்களைவிட அதிக கேட்சுகளை விட்டவர்கள் ரிஷப் பண்ட் தான் என கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மெக்ரத்தின் அறக்கட்டளைக்கு சச்சின் உதவி!