Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா, பாகிஸ்தானுக்கு வந்து ஆடாவிட்டால் கிரிக்கெட் ஒன்றும் அழிந்துவிடாது – பாகிஸ்தான் பவுலர் கோபம்!

இந்தியா, பாகிஸ்தானுக்கு வந்து ஆடாவிட்டால் கிரிக்கெட் ஒன்றும் அழிந்துவிடாது – பாகிஸ்தான் பவுலர் கோபம்!

vinoth

, திங்கள், 22 ஜூலை 2024 (09:50 IST)
8 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் கோப்பை தொடரை அடுத்த ஆண்டு பாகிஸ்தான் நடத்துகிறது. இதில் இந்திய அணி கலந்துகொள்வது குறித்து குழப்பமான செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் எப்படியும் இந்திய அணி கலந்துகொள்ளும் என கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இப்போது மீண்டும் பிசிசிஐ, பாகிஸ்தான் செல்ல முடியாது என ஐசிசியிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் இந்திய அணி விளையாடும் போட்டிகளை இலங்கை அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில்  நடத்துமாறும் ஐசிசிக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகிறது.

ஆனால் இந்த விஷயத்தில் ஐசிசி, பிசிசிஐ பக்கம்தான் நிற்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் இந்தியா இல்லையென்றால் அவர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும். அதனால் ரகசியமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் சமாதானப் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி  தெரிவித்துள்ள கருத்து கவனம் பெற்றுள்ளது. அதில் “பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு சென்று 50 ஓவர் கிரிக்கெட்டில் விளையாடியது. அதனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாடதான் வேண்டும். இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்கு வந்து விளையாடவே விரும்புகிறார்கள். சாம்பியன்ஸ் கோப்பை பாகிஸ்தானில் மட்டுமே நடத்தப்படவேண்டும். இந்தியா வந்து பங்கேற்கவில்லை என்றால் கிரிக்கெட் ஒன்றும் அழிந்துவிடாது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யுஏஇ அணிக்கு எதிரான போட்டி..! 78 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் வெற்றி..!!