ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் ஹர்திக் பாண்ட்யா

Webdunia
சனி, 23 டிசம்பர் 2023 (14:42 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நடந்து வருகிறது.  இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் முக்கிய அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் அணியின் 10 ஆண்டுகளாக  கேப்டன் பொறுப்பில் இருந்து, இதுவரை  முறை கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர் ரோஹித் சர்மா..
 
இந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்த்திக் பாண்ட்யாவை நியமித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த நிலையில் ரோஹித் சர்மாவின் கேப்டன்சிக்கு பிரியாவிடை அளித்துள்ளது மும்பை அணி நிர்வாகம் அவர் இதே அணியில் தொடர்வாரா? இல்லை வேறு அணிக்கு செல்வாரா என கேள்வி எழுந்துள்ளது.
  
இதையடுத்து, மும்பை அணியின் புதிய கேப்டன் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
 
இந்த நிலையில், மும்பை அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பங்கேற்க மாட்டார் என புதிய தகவல் வெளியாகிறது.
 
கணுக்கால் காயம் காரணமாக அடுத்தாண்டு நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின்  புதிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா பங்கேற்க மாட்டா என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆசிய கோப்பை: வங்கதேச 'ஏ' அணியுடன் இந்தியா 'ஏ' அரையிறுதி மோதல்

46 ஆண்டுகளுக்குப் பிறகு… சாதனை படைத்த நியுசிலாந்து பேட்ஸ்மேன் டேரில் மிட்செல்!

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments