Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்ச்சையைக் கிளப்பிய ஹர்திக் பாண்ட்யாவின் விக்கெட்… அம்பயர் எடுத்த அதிர்ச்சி முடிவு!

Webdunia
வியாழன், 19 ஜனவரி 2023 (10:03 IST)
நேற்றைய போட்டியில் ஹர்திக் பாண்ட்யாவின் அவுட் ரசிகர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் இடையே சர்ச்சையைக் கிளப்பியது.

நேற்று இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நடந்தது. இதில் இந்திய அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் சுப்மன் கில் மற்றும் நியுசிலாந்து அணியின் பிரேஸ்வெல் ஆகியோரின் சிறப்பான சதம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்த போட்டியில் இந்திய அணியின் வீரர் ஹர்திக் பாண்ட்யாவின் விக்கெட் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.  மிட்செல் வீசிய பந்தில் ஹர்திக் பாண்ட்யா பவுல்ட் ஆனதாக அப்பீல் கேட்கப்பட்டது. விக்கெட் கீப்பர் டாம் லாதம்மின் கையுறை ஸ்டம்ப்பை ஒட்டி இருந்ததால் சந்தேகமடைந்த நடுவர் மூன்றாம் நடுவரிடம் ஆலோசனைக் கேட்டார். டி வி ரிப்ளேயில் பந்து ஸ்டம்ப்புக்கு மேலாக சென்றது தெளிவாக தெரிந்தது. அனால் கீப்பரின் கையுறை ஸ்டம்புக்கு பின்னால் இருந்ததாக தெரிவித்த நடுவர், சந்தேகத்தின் பலனை பவுலருக்கு வழங்கி விக்கெட் என அறிவித்தார். நடுவரின் இந்த முடிவு தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விக்கெட் எடுத்துவிட்டு சீன் போட்ட திக்வேஷ் ராதி.. தம்பி அபராதம் கட்டுங்க என குட்டு வைத்த பிசிசிஐ!

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

அடுத்த கட்டுரையில்
Show comments