Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இலங்கை தொடரில் ஓய்வு கேட்கும் ஹர்திக் பாண்ட்யா! அப்ப யாரு கேப்டன்?

இலங்கை தொடரில் ஓய்வு கேட்கும் ஹர்திக் பாண்ட்யா! அப்ப யாரு கேப்டன்?

vinoth

, செவ்வாய், 16 ஜூலை 2024 (14:11 IST)
இந்திய அணி இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி 20 தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றுள்ள நிலையில் அடுத்து இலங்கை தொடருக்கு தயாராகி வருகிறது. இலங்கை சுற்றுப் பயணத்த்தில் 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரிலும் ரோஹித் ஷர்மா, கோலி மற்றும் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்படவுள்ளது.

கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் நடக்கும் முதல் தொடர் என்பதால் இந்த தொடரின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான அட்டவணை சில நாட்களுக்கு முன்னர் வெளியானது. இந்த தொடரின் டி 20 போட்டிகளுக்கான அணியில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக செயல்படுவார் என்று சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த தொடரில் இருந்து விடுவிக்குமாறு பிசிசிஐ வசம் கேட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இலங்கை தொடருக்கான அணி அறிவிக்கப்படும் என தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யுவ்ராஜ் சிங்கின் ஆல்டைம் ஒருநாள் அணியில் தோனிக்கு இடமில்லையா?... ரசிகர்கள் அதிருப்தி!