Publish Date: Thu, 02 Feb 2023 (08:41 IST)
Updated Date: Thu, 02 Feb 2023 (08:43 IST)
நியுசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி 20 தொடரில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சதம் அடித்து அசத்திய கில் 126 ரன்கள் சேர்த்து அவுட் ஆகாமல் கடைசி வரை களத்தில் இருந்தார்.
இந்த தொடரில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார். தொடர் வெற்றிக்குப் பின்னர் பேசிய அவர் “இந்த தொடர் நாயகன் விருது மற்றும் கோப்பையும் ஊழியர்களுக்கும் செல்கிறது, அவர்கள் அனைவருக்காகவும் நான் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையைச் சொல்வதென்றால், நான் எப்போதும் இப்படித்தான் விளையாடுவேன். முன்கூட்டிய யோசனைகள் இல்லாமல், தேவையானதை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். எனது கேப்டன்சியில், நான் அதை எளிமையாக வைத்து, எனது தைரியத்தை ஆதரிக்கிறேன்.
எனக்கு ஒரு எளிய விதி உள்ளது - நான் கீழே சென்றால், நான் எனது விதிமுறைகளின்படி இறங்குவேன். சவால்களை எடுப்பது பற்றி பேசினோம். நாங்கள் ஐபிஎல் இறுதிப் போட்டியில் இங்கு விளையாடியபோது, இரண்டாவது இன்னிங்ஸ் மிகவும் கடினமானதாக உணர்ந்தோம், ஆனால் இன்று நான் அதை ஒரு சாதாரண விளையாட்டாக மாற்ற விரும்பினேன். எனவே, நாங்கள் முதலில் பேட்டிங் செய்தோம். இதுபோல் தொடர்ந்து செயல்பட முடியும் என நம்புகிறோம்.” எனக் கூறியுள்ளார்.