Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம்… இந்திய அணியோடு அமெரிக்கா செல்லாமல் ஒதுங்கிய ஹர்திக் பாண்ட்யா!

vinoth
செவ்வாய், 28 மே 2024 (07:25 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவுக்கும், நடிகை நடாஷாவுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் பிறந்தார்.


மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த பாண்ட்யா- அகஸ்தியா திருமண வாழ்வில் இப்போது விரிசல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஹர்திக்கும் நடாஷாவும் பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக வட இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஹர்திக் அவரது மனைவி நடாஷாவை விவாகரத்து செய்யும்பட்சத்தில் அவரின் சொத்துகளில் 70 சதவீதத்தை அவருக்கு ஜீவனாம்சமாகக் கொடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஹர்திக் பாண்ட்யா தான் சம்பாதித்து வாங்கிய சொத்துகளை அவருடையா தாயாரின் பெயரில்தான் வாங்கி வைத்திருக்கிறாராம். அதனால் பெரிய தொகை ஒன்றும் நடாஷாவுக்குக் கிடைக்கப் போவதில்லை என சொல்லப்படுகிறது. 

இந்நிலையில் இந்த குடும்ப விவகாரம், ஹர்திக் பாண்ட்யாவை கடுமையாக பாதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் அவர் இப்போது இந்திய அணியோடு அமெரிக்கா செல்லாமல் வெளிநாடு சென்று ஓய்வெடுத்து வருவதாக சொல்லப்படுகிறது. டி 20 உலகக் கோப்பைக்கான அணிக்கு துணைக் கேப்டனாக அவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் எப்போது அமெரிக்கா சென்று அணியோடு இணைவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் கிரிக்கெட் களத்துக்கு திரும்புகிறாரா டிவில்லியர்ஸ்… அவரே கொடுத்த அப்டேட்!

டி 20 போட்டிகளில் இனி இவர்தான் விக்கெட் கீப்பர்… சூர்யகுமார் யாதவ் சொன்ன பதில்!

ஜெர்ஸியில் பாகிஸ்தான் பெயரை அச்சடிக்க மறுக்கும் பிசிசிஐ.. வலுக்கும் எதிர்ப்புகள்!

ரோஹித் ஷர்மாவுக்கு சிறப்பு சலுகை… ரஞ்சி போட்டிக்காக மைதானத்தில் கூடுதல் இருக்கை!

எனக்கு ஏன் வலிக்க வேண்டும்?... சாம்பியன்ஸ் கோப்பை அணியில் இடம் பெறாதது குறித்து சூர்யகுமார்!

அடுத்த கட்டுரையில்