Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான்கு வார ஓய்வு… ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை இழக்கும் ஹர்திக் பாண்ட்யா!

Advertiesment
ஆசிய கோப்பை

vinoth

, செவ்வாய், 30 செப்டம்பர் 2025 (14:40 IST)
ஆசியக் கோப்பை தொடரில் தோல்வியேக் காணாமல் இந்திய அணி இம்முறை தொடரை வென்றுள்ளது. நேற்று முன்தினம் துபாயில் நடந்த ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில், பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.  இந்த தொடரில் விளையாடி வந்த ஹர்திக் பாண்ட்யா சூப்பர் நான்கு சுற்றில் இலங்கைக்கு எதிரானப் போட்டியில் காயமடைந்தார்.

அதனால் அவர் இறுதிப் போட்டியில் களமிறங்கவில்லை. அவரை மருத்துவர்கள் நான்கு வாரம் ஓய்வில் இருக்க அறிவுறுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் அடுத்து நடக்கவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெற மாட்டார் என சொல்லப்படுகிறது.

அதே போல அதன் பின்னர் நடக்கவுள்ள டி 20 தொடரிலும் அவர் விளையாடமாட்டார் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹாரிஸ் ரவுஃபுக்கு நன்றி.. ரவிச்சந்திரன் அஸ்வினின் கிண்டல் பதிவு வைரல்..!