Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி இல்லாததால் எல்லா பொறுப்பும் என் மேல்தான்… கொஞ்சம் ஓவரா போறாரோ ஹர்திக் பாண்ட்யா!

Webdunia
வெள்ளி, 3 பிப்ரவரி 2023 (10:37 IST)
ஹர்திக் பாண்ட்யா சமீபத்தில் பேசி இருக்கும் கருத்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபகாலமாக டி 20 அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார். சமீபத்தில் நடந்த நியுசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தொடர் நாயகனாக அறிவிக்கப்பட்டார்.

தொடர் வெற்றிக்குப் பின்னர் பேசிய அவர் “இந்த தொடர் நாயகன் விருது மற்றும் கோப்பையும் ஊழியர்களுக்கும் செல்கிறது, அவர்கள் அனைவருக்காகவும் நான் மகிழ்ச்சியடைகிறேன். உண்மையைச் சொல்வதென்றால், நான் எப்போதும் இப்படித்தான் விளையாடுவேன். முன்கூட்டிய யோசனைகள் இல்லாமல், தேவையானதை கற்றுக்கொள்ள முயற்சிக்கிறேன். எனது கேப்டன்சியில், நான் அதை எளிமையாக வைத்து, எனது தைரியத்தை ஆதரிக்கிறேன்.

மேலும் அவர் “எனக்கு மைதானத்தின் எல்லா பக்கத்திலும் சிக்ஸ் அடிக்க ஆசை. ஆனால் நான் இப்போது பார்ட்னர்ஷிப்களில் அதிக நம்பிக்கை வைக்கிறேன். முன்பு தோனி பின் வரிசையில் இறங்கி விளையாடினார். இப்போது தோனி இல்லாததால் எல்லா பொறுப்பும் என் தலையில் உள்ளது” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிஷப் பண்டை தாக்கிய பாண்ட்யா அடித்த பந்து! என்ன ஆச்சு அவருக்கு?

வன்மத்துக்கு வன்மமா? பாகிஸ்தான் மைதானத்தில் இந்தியக் கொடி நீக்கம்! Viral Video! | Champions Trophy 2025

தலயின் ஹெலிகாப்டர் ஷாட் பாக்க ரெடியா? சென்னையில் 7 மேட்ச்..! வெளியானது IPL 2025 அட்டவணை!

கிரிக்கெட்டில் முதல்ல சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை ஒழிக்கணும்..? - ரவிச்சந்திரன் அஷ்வின் அதிரடி!

மகளிர் பிரிமியர் லீக் கிரிக்கெட்.. பலம் வாய்ந்த மும்பை அதிர்ச்சி தோல்வி.. டெல்லி அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments