Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியிடம் கேப்டன்ஷிப் இல்லாதது டேஞ்சரான விஷயம்… பயமுறுத்தும் RCB வீரர்!

Webdunia
வெள்ளி, 18 மார்ச் 2022 (16:15 IST)
ஆர் சி பி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து கோலி விலகியுள்ள நிலையில் அவருக்கு பதில் பாப் டு பிளஸ்சி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

2021 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. ஐபிஎல் உள்ளிட்ட சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். முதலில் ஆர் சி பி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்துதான் அவர் விலகினார். அதுபோல அந்த அணியின் மற்றொரு நட்சத்திர வீரரான டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றார். இது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. இதையடுத்து 2022 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கு கேப்டனாக தென் ஆப்பிரிக்க வீரர் பாஃப் டு பிளஸ்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஆர் சி பி அணியின் அதிரடி வீரர்களில் ஒருவரான க்ளன் மேக்ஸ்வெல் கோலி கேப்டன்சி அழுத்தம் இல்லாமல் இருப்பது எதிரணியினருக்கான ஆபத்து என்று கூறியுள்ளார். மேலும் ’கேப்டன் பொறுப்பு என்பது கண்டிப்பாக ஒரு சுமைதான். அதனால்தான் கோலி அந்த பொறுப்பை நீண்ட காலமாக சுமந்து வந்த நிலையில் இப்போது அதில் இருந்து விலகியுள்ளார். அவர் அழுத்தம் இல்லாமல் விளையாடுவது எதிரணியினருக்கு ஆபத்தான ஒன்றுதான்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரம் மீது புகார் பதிவு.. கைது செய்யப்படுவாரா?

அஜித் அகார்கர் கூறுவது அபத்தமாக உள்ளது… ஸ்ரேயாஸ் ஐயருக்கு கூடும் ஆதரவு!

ஷுப்மன் கில்லுக்காக சந்தோஷம்… ஆனா ஸ்ரேயாஸுக்காக வருத்தம் – இந்திய அணி தேர்வு பற்றி அஸ்வின் விமர்சனம்!

RCB அணி அதை செய்ய 72 ஆண்டுகள் ஆகும்… நக்கலடித்த அம்பாத்தி ராயுடு!

ஸ்ரேயாஸ் ஐயருக்கு எதிராக செயல்படுகிறாரா கம்பீர்?... ரசிகர்கள் ஆதங்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments