Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறுமி வன்கொடுமை வழக்கு.. நிரபராதியான சந்தீப் லமிச்சேனே! – உலகக்கோப்பையில் நடக்கும் அதிரடி மாற்றம்!

Prasanth Karthick
புதன், 15 மே 2024 (18:39 IST)
சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நேபாள வீரர் சந்தீப் லமிச்சேனே நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளார்.



நேபாள நாட்டு கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தவர் சந்தீப் லமிச்சேனே. நேபாள அணிக்காக பல்வேறு சர்வதேச தொடர்களில் விளையாடிய சந்தீப் 2018 – 2020ல் ஐபிஎல் போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காகவும் விளையாடினார்.

2022ம் ஆண்டில் ஹோட்டல் அறையில் வைத்து சிறுமியை பலாத்காரம் செய்ததாக சந்தீப் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த காத்மாண்டு நீதிமன்றம் சந்தீப்பிற்கு சிறை தண்டனை விதித்த நிலையில், கரீபியன் ப்ரீமியர் லீகில் விளையாடிக் கொண்டிருந்த சந்தீப் மீண்டும் நேபாளத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு கைது செய்யப்பட்டார்.

ALSO READ: சிஎஸ்கே, ஆர்சிபி அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் என்ன நடக்க வேண்டும்?

இந்த விசாரணை கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வந்த நிலையில் தற்போது சந்தீப் லபுச்சேனே குற்றவாளி அல்ல என்று உறுதி செய்த நீதிமன்றம் அவரை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. ஆனால் சந்தீப் லபுச்சேனே விடுதலையாவதற்கு முன்னரே உலக கோப்பை டி20 தொடருக்கான நேபாள அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அறிவிக்கப்பட்ட அணியில் மாற்றங்கள் செய்ய மே 25 வரை அவகாசம் உள்ளது. அதனால் சந்தீப் லபுச்சேனை உலக கோப்பை அணியில் நேபாள் கிரிக்கெட் வாரியம் விரைவில் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து ஒயிட்வாஷ் ஆகும்: மெக்கரெத் எச்சரிக்கை..!

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேறுகிறாரா அஸ்வின்? பரபரப்பு தகவல்..!

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் கோலியின் அண்மைய புகைப்படம்… ரசிகர்கள் ஆச்சர்யம்!

அடுத்த கட்டுரையில்