உலகக் கோப்பைக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு… விராட் & கோலி குறித்த கேள்விக்கு கம்பீர் மழுப்பல் பதில்!

vinoth
செவ்வாய், 14 அக்டோபர் 2025 (15:21 IST)
இந்திய அணியின் மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டனர். 2027 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதுதான் அவர்களின் தற்போதைய நோக்கமாக உள்ளது.

ஆனால் அதுவரைக்கும் அவர்களை பிசிசிஐ அணிக்குள் விட்டுவைக்க வாய்ப்பில்லை என்ற சூழல்தான் நிலவுகிறது. சமீபத்தில் ரோஹித் ஷர்மாவிடம் இருந்து ஒருநாள் கேப்டன்சியை தேர்வுக்குழு பறித்தது. அதனால் இந்த மாதம் நடக்கவுள்ள ஆஸ்திரேலியா தொடர்தான் அவர்களுக்கானக் கடைசி தொடராக இருக்கும் என ஊகங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் அவர்கள் இருவரின் எதிர்காலம் பற்றிய கேள்விக்கு கம்பீர் மழுப்பலான பதிலை அளித்துள்ளார். அதில் “உலகக் கோப்பைக்கு இன்னும் இரண்டரை ஆண்டுகள் உள்ளன. நாம் கொஞ்சம் நிகழ்காலத்தில் இருப்பது நல்லது. அவர்கள் இருவருக்கும் ஆஸ்திரேலியா தொடர் சிறப்பான ஒன்றாக அமைய வாழ்த்துவோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக் கோப்பைக்கு இன்னும் ரொம்ப நாள் இருக்கு… விராட் & கோலி குறித்த கேள்விக்கு கம்பீர் மழுப்பல் பதில்!

யூடியூப் 'வியூஸ்'க்காக இப்படி பேசுவதற்கு வெட்கமாக இல்லையா? ஸ்ரீகாந்துக்கு கம்பீர் கேள்வி..!

15 வயதில் துணைக் கேப்டன்… ரஞ்சிக் கோப்பை தொடரில் சாதனை படைத்த வைபவ் சூர்யவன்ஷி!

2வது இன்னின்ங்சில் இந்தியா.. வெற்றிக்கு இன்னும் எத்தனை ரன்கள் தேவை?

ஐ.பி.எல்.லில் இருந்து விராட் கோலி விலகுகிறாரா? ஆர்.சி.பி.-யின் வர்த்தக ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்ததால் சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments