Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஐ.பி.எல்.லில் இருந்து விராட் கோலி விலகுகிறாரா? ஆர்.சி.பி.-யின் வர்த்தக ஒப்பந்தத்தை நீட்டிக்க மறுத்ததால் சர்ச்சை!

Advertiesment
விராட் கோலி

Siva

, திங்கள், 13 அக்டோபர் 2025 (17:00 IST)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, அடுத்த ஐ.பி.எல். சீசனில் விளையாடுவது குறித்து ஊகங்கள் எழுந்துள்ளன. ஆர்.சி.பி. அணி தொடர்பான ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை நீட்டிக்க அவர் மறுத்துள்ளதாக வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்த்யுள்ளது.
 
இது குறித்துப் பேசிய முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா, "வர்த்தக ஒப்பந்தத்தை மறுத்ததால் அவர் ஆர்.சி.பி.யை விட்டு வெளியேறுவார் என்று அர்த்தம் இல்லை. அவர் நிச்சயமாக அதே அணிக்காக விளையாடுவார். கோப்பையை வென்ற பிறகு அவர் ஏன் வெளியேற வேண்டும்?" என்று கேள்வி எழுப்பினார்.
 
மேலும், வர்த்தக ஒப்பந்தம் என்பது விளையாடும் ஒப்பந்தத்திலிருந்து வேறுபட்டது என்றும், விளம்பரம் மற்றும் பிராண்டிங் தொடர்பானது என்றும் சோப்ரா விளக்கினார். ஆர்.சி.பி. அணி விற்பனைக்கு வரலாம் என்ற தகவலும் இதற்கு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
 
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து சற்று விலகி இருந்த கோலி, இந்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்திய அணியுடன் மீண்டும் இணைகிறார். அவரது வருகை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

9 விக்கெட்டுக்களை இழந்த மே.இ.தீவுகள்.. வெற்றியின் விளிம்பில் இந்தியா..!