Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேத்யூஸுக்கு நடந்தது பரிதாபகரமானது… கம்பீர் வருத்தம்!

Webdunia
செவ்வாய், 7 நவம்பர் 2023 (07:10 IST)
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது.இந்த போட்டியில் இலங்கை அணியின் ஏஞ்சலோ மேத்யூஸ்  பேட் செய்ய தாமதமாக வந்ததால் அவரை டைம்ட் அவுட் முறையில் விக்கெட்டுக்கு அப்பீல் செய்தனர் வங்கதேச வீரர்கள். அதை ஏற்ற நடுவர்கள் 146 ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதன் முறையாக Timed Out முறையில் மேத்யூஸை அவுட் என அறிவித்தனர்.

தவறான ஹெல்மெட் எடுத்து வந்ததால் சரியான ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டு இன்னொரு வீரர் வர 2 நிமிடத்திற்கு மேல் ஆனது என மேத்யூஸ் தரப்பு விளக்கம் அளித்த போதும் அதை வங்கதேச கேப்டன் ஷகீப் அல் ஹசன் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்நிலையில் இப்போது மேத்யூஸுக்கு ஆதரவாக பல முன்னாள் வீரர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இது பற்றி பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் “மேத்யூஸுக்கு டெல்லியில் நடந்திருப்பது மிகவும் பரிதாபகரமானது” என அவருக்கு ஆதரவுக் குரல் கொடுத்துள்ளார். ரசிகர்களும் பங்களாதேஷ் கிரிக்கெட்டின் ஸ்பிரிட்டை கெடுத்துவிட்டதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மழையால் பாதிக்கப்படுமா இன்றைய ஐபிஎல் போட்டி… முதல் அணியாக ப்ளே ஆஃப்க்கு செல்லும் RCB?

இந்த சீசனோடு ஓய்வா?... தோனி எடுத்த முடிவுதான்.. வெளியான தகவல்!

கோலியைக் கௌரவிக்கும் விதமாக RCB ரசிகர்கள் செயல்…! இன்றைய போட்டி முழுவதும் வெள்ளை ஜெர்ஸிதான்!

”RCBகிட்ட கப் இல்லைன்னு யார் சொன்னது?” ண்ணோவ்.. சும்மா இருண்ணா! - படிதார் பதிலுக்கு ரசிகர்கள் ரியாக்‌ஷன்!

ஜடேஜாவைக் கேப்டனாக்குங்கள்… இளம் வீரர் வேண்டாம் -அஸ்வின் சொல்லும் காரணம்!

அடுத்த கட்டுரையில்
Show comments