Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இஷான் கிஷானை உச்சி முகர்ந்து பாராட்டிய முன்னாள் இந்திய வீரர்!

இஷான் கிஷானை உச்சி முகர்ந்து பாராட்டிய முன்னாள் இந்திய வீரர்!
, சனி, 31 டிசம்பர் 2022 (15:45 IST)
இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இஷான் கிஷான் இரட்டை சதம் அடித்து அசத்தினார். இஷான் கிஷான் 130 பந்துகளில் 210 ரன்கள் அடித்து உள்ளார் என்பதும் அதில் 24 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்சர்கள் அடங்கும்.

அவர் 126 பந்துகளில் 200 ரன்கள் சேர்த்தார். இதுவரை அடிக்கப்பட்ட இரட்டை சதங்களிலேயே  இதுதான் அதிவேக சதம். அதுமட்டுமில்லாமல் இஷான் கிஷான் தன்னுடைய முதல் சர்வதேச சததத்தையே இரட்டை சதமாக மாற்றிய பெருமை இஷான் கிஷானையே சேரும்.

இந்நிலையில் இப்போது இலங்கைக்கு எதிரான தொடரில்  ஷிகார் தவானுக்குப் பதில் அவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பேசியுள்ள கௌதம் கம்பீர் “ஒருநாள் போட்டிகளில் இரட்டைசதம் அடிப்பது எளிதானது இல்லை. அதுவும் 35 ஓவர்களில் 200 ரன்கள் சேர்த்தார் இஷான் கிஷான். அவர் நிதானமாக விளையாடவும் கூடியவர். அதனால் கண்டிப்பாக ரோஹித் ஷர்மாவோடு அவர்தான் தொடக்க ஆட்டக்காரராக விளையாட வேண்டும்.” எனக் கூறியுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“நீ கவனமாக வண்டி ஓட்டவேண்டும்… “ அன்றே அட்வைஸ் செய்த ஷிகார் தவான்!