Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி சிஎஸ்கேவில் நீடிக்க தேவையில்லையா? – கவுதம் கம்பீர் கருத்தால் சர்ச்சை!

Webdunia
செவ்வாய், 30 நவம்பர் 2021 (15:55 IST)
சிஎஸ்கே அணியில் நீடித்திருக்க வேண்டிய வீரர்கள் குறித்து பட்டியலிட்ட கௌதம் கம்பீர் தோனியின் பெயரை சொல்லாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகளில் புதிதாக இரண்டு அணிகள் சேர்த்து மொத்தம் 10 அணிகள் விளையாட உள்ளன. இந்நிலையில் ஐபிஎல் வீரர்கள் ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் 3 உள்நாட்டு வீரர்கள் மற்றும் 1 வெளிநாட்டு வீரரை மட்டும் தக்கவைத்துக் கொண்டு மற்றவர்களை விடுவிக்க வேண்டும். இன்றே அதற்கு கடைசி நாள் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்க வேண்டிய வீரர்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள கௌதம் கம்பீர் முக்கியமான வீரர்களாக ருத்ராஜ் கெயிக்வாட், ஜடேஜா, டூ ப்ளசிஸ், சாம் கரண் உள்ளிட்ட பெயர்களை சொல்லியுள்ளார். ஆனால் அதில் அணி கேப்டன் தோனியின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இதுகுறித்து பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இதுவும் நல்லதுதான்… விராட் கோலியின் ஃபார்ம் குறித்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் கருத்து!

இந்திய அணிக்கு பயிற்சியாளர் ஆகிறாரா இந்த வெளிநாட்டு முன்னாள் வீரர்?

எங்கள் தோல்விக்கு யார் பொறுப்பு… பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாம் கருத்து!

சூப்பர்-8 சுற்றுக்கு வங்கதேசம் தகுதி...! நேபாளம் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி..!!

சூப்பர் 8 போட்டி அட்டவணை வெளியீடு! இந்தியாவுடன் மோதும் அணிகள் எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments