Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரோஹித்தை ஒருநாள் அணிக்கு கேப்டனாக நியமித்தது ஏன்? சவுரவ் கங்குலி விளக்கம்!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (10:15 IST)
இந்திய ஒருநாள் அணிக்கு கேப்டன் பொறுப்பு வகித்து வந்த கோலி நீக்கப்பட்டு புதிய கேப்டனாக ரோஹித் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் விராட் கோலியும் ஒருவர். ஆனால் கடந்த சில மாதங்களாக அவர் கேப்டன்சி மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில் டி 20 போட்டிகளின் கேப்டன்சியில் இருந்து விலகினார். ஆனால் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் கேப்டனாக நீடித்தார்.

ஆனால் இப்போது தென் ஆப்பிரிக்கா தொடருக்கு முன்னதாக அவரிடம் இருந்து ஒரு நாள் அணிக்கான கேப்டன்சியும் பிடிங்கப்பட்டு ரோஹித் ஷர்மா வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து வெளியான தகவலில் ‘கோலி தானாகவே கேப்டன் பதவியில் இருந்து ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்த்தோம். அதற்காக 48 மணிநேரம் காத்திருந்தோம். ஆனால் அவர் செய்யாததால் நீக்கப்பட்டார்’ என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் முதல் முறையாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி ரோஹித் கேப்டனாக நியமிக்கப்பட்டது குறித்து பேசியுள்ளார். அதில் ‘கோலி டி 20 கிரிக்கெட்டில் இருந்து கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்யவேண்டாம் என நாங்கள் கூறினோம். ஆனால் அவர் விலகினார். அதனால் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் இரு வடிவங்களுக்கு இரண்டு கேப்டன்கள் இருப்பது சரியாக இருக்காது என நாங்கள் கருதினோம். ரோஹித் ஷர்மாவின் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு கேப்டனாக கோலி தொடர்வார்’ எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

மழையால் தாமதமாகும் ராஜஸ்தான் - கொல்கத்தா போட்டி.. போட்டி ரத்தானால் 2ஆம் இடம் யாருக்கு?

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

எங்க போனாலும் கேமராவை தூக்கிக்கிட்டு உள்ள வந்துடுவீங்களா? – ஸ்டார் ஸ்போர்ட்ஸை பொறிந்து தள்ளிய ஹிட்மேன்!

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments