Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் இந்த வருடமே நடக்க ஏற்பாடு! – கங்குலி தகவல்!

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (09:30 IST)
கொரோனா பாதிப்பால் ஐபிஎல் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த வருடமே ஐபிஎல் போட்டிகளை நடத்த திட்டமிட்டு வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஆண்டுதோறும் நடைபெறும் ஐபிஎல் போட்டிகள் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற இருந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பினால் ஊரடங்கு அமலுக்கு வந்ததால் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. மீண்டும் போட்டிகள் நடத்துவது குறித்து பல்வேறு ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்றும் தெளிவான முடிவை எட்ட முடியாத நிலை உள்ளது, இதனால் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் ரத்து ஆகலாம் என பேசிக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டிய சூழல் இருப்பதால் பார்வையாளர்கள் இன்றி நேரடி ஒளிபரப்பு மூலம் மட்டும் போட்டிகளை நடத்த ஆலோசித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments