Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலியும் ரோஹித்தும் யாருக்கும் தங்களை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை… கம்பீர் ஆதரவு!

vinoth
செவ்வாய், 4 பிப்ரவரி 2025 (12:11 IST)
இந்திய அணியின் பயிற்சியாளர் கம்பீருக்கு ஒரு ஆறுதலாக சமீபத்தில் நடந்த இங்கிலாந்து அணிக்கெதிரான டி 20 தொடர் அமைந்திருக்கும். வரிசையான டெஸ்ட் தொடர் தோல்விகளால் கடும் விமர்சனத்துக்கு ஆளாகியிருந்த அவருக்கு இந்திய அணி இந்த தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது புத்துணர்ச்சியைக் கொடுத்திருக்கும்.

டி 20 தொடரில் கலக்கிக் கொண்டிருக்கும் இந்திய அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் சொதப்பி வருகிறது. அதற்குக் காரணம் அணியில் இருக்கும் மூத்த வீரர்கள்தான் காரணம் என சொல்லப்படுகிறது. இதனால் ரோஹித் மற்றும் கம்பீருக்கும் இடையில் கூட கருத்து வேறுபாடு எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கம்பீர். கோலி மற்றும் ரோஹித்துக்கு ஆதரவாகப் பேசியுள்ளார். அதில் “ கோலி மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் ஜாம்ப்வான்கள்.  அவர்கள் தங்கள் திறமையை யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் இன்னும் சில ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடுவார்கள்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர்களின் சண்டையையும் டிரம்ப் தான் நிறுத்தினாரா? கலாய்க்கும் நெட்டிசன்கள்..!

வாஷிங்டன் சுந்தருக்கு இம்பேக்ட் ப்ளேயர் விருது கொடுத்த கௌரவித்த பிசிசிஐ!

எதிர்காலம் என்ன?... கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் பிசிசிஐ!

‘ஆண்டர்சன்-டெண்டுல்கர்’ தொடரின் சிறந்த அணி… ஷுப்மன் கில்லுக்கு இடமில்லையா?

இந்திய அணிக்கு நல்ல செய்தி… ஆசியக் கோப்பை தொடருக்குக் கேப்டன் இவர்தானாம்!

அடுத்த கட்டுரையில்
Show comments