Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியா திரும்பி இந்திய அணியோடு இணைந்த கம்பீர்..!

vinoth
செவ்வாய், 3 டிசம்பர் 2024 (08:36 IST)
பெர்த் நகரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இந்த  டெஸ்ட்டில் மிகச்சிறப்பாக விளையாடி இரண்டாவது இன்னிங்ஸில் 161 ரன்கள் சேர்த்து அசத்தினார் ஜெய்ஸ்வால். அவரின் இந்த இன்னிங்ஸ்தான் இந்திய அணிக்கு மிக முக்கியமானத் திருப்புமுனையாக அமைந்தது.

கம்பீரின் பயிற்சியின் கீழ் அடுத்தடுத்து இரண்டு தொடர்களை இழந்த நிலையில் பெர்த் டெஸ்ட் வெற்றி அவருக்கு சிறு ஆசுவாசத்தைக் கொடுத்திருக்கும். இந்த வெற்றியை இந்த தொடர் முழுவதும் தொடர்ந்து எடுத்து செல்லவேண்டிய கட்டாயமும் உள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கு நடுவே கம்பீர் தனிப்பட்ட காரணங்களுக்காக சில நாட்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு திரும்பினார். இந்நிலையில் தற்போது அவர் மீண்டும் ஆஸ்திரேலியா திரும்பி இந்திய அணியுடன் இணைந்துள்ளார். அடிலெய்டில் நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக டிசம்பர் 6 ஆம் தேதி தொடங்குகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட் செய்யும் போது ஆஸ்திரேலிய வீரர்கள் அந்த வார்த்தையை சொல்லி ‘ஸ்லெட்ஜ்’ செய்தார்கள்- பவுமா பதில்!

இதுதான் இட ஒதுக்கீட்டின் பயன்… டெம்பா பவுமாவை முன்னிட்டு சமூகவலைதளங்களில் நடக்கும் விவாதம்!

ஒரே பந்தில் மிஸ் ஆன 3 ரன் அவுட்.. அஷ்வின் கடுப்பான தருணம்!

எங்களை கிண்டல் செய்தவர்களை வெற்றியின் மூலம் தகர்த்து இருக்கிறோம்! - தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட்: தென்னாப்பிரிக்கா அபார வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments