Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெளிநாட்டு வீரரை பவுலிங் பயிற்சியாளர் பொறுப்புக்கு பரிந்துரைக்கும் கம்பீர்… சம்மதிக்குமா பிசிசிஐ?

Advertiesment
கம்பீர்

vinoth

, சனி, 13 ஜூலை 2024 (07:21 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் கொல்க்ததா அணிக்கு ஆலோசகராக செயல்பட்டு அந்த அணியை மூன்றாவது முறையாக கோப்பையை வென்று கொடுத்துள்ளார். இதையடுத்து அவர் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஆகிக்கொண்டே வந்தது. ஏன் அந்த தாமதம் என்பதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. இந்திய அணியின் பயிற்சியாளராக பணியாற்ற ராகுல் டிராவிட்டுக்கு ஆண்டுக்கு 12 கோடி ரூபாய் பிசிசிஐ ஊதியமாகக் கொடுத்தது. இப்போது கம்பீர் அதைவிட அதிக சம்பளத்தைப் பெறவுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் அடுத்த பவுலிங் பயிற்சியாளர் யார் என்பது குறித்த தேர்வும் தற்போது நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்த பட்டியலில் முன்னாள் இந்திய பவுலர்களான ஜாகீர் கான், லஷ்மிபதி பாலாஜி மற்றும் வினய் குமார் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதில் வினய் குமாருக்கு கம்பீரின் ஆதரவு இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவர் முன்னாள் தென்னாப்பிரிக்கா பவுலர் மோர்னே மோர்க்கலை பந்துவீச்சு பயிற்சியாளர் ஆக்கவேண்டும் என அழுத்தம் தருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பயிற்சியாளர் கேரி கிரிஸ்டனை அவமதித்தாரா ஷாகீன் அப்ரிடி?- விரைவில் ஒழுங்கு நடவடிக்கை!