Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“ஷாகீன் அப்ரிடியின் ஓவரில் அதை மட்டும் செய்யக் கூடாது..”- இந்திய வீரர்களுக்கு கம்பீர் அட்வைஸ்!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (16:46 IST)
இந்திய அணி வீரர்கள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடியை எதிர்கொள்வது குறித்து கம்பீர் அறிவுரை வழங்கியுள்ளார்.

அக்டோபர் மாதம் நடக்க உள்ள டி 20 உலகக்கோப்பை தொடருக்காக உலக கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதற்காக அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு போட்டிகளுக்காக தயாராகி வருகின்றனர்.

இந்தியா தனது முதல் போட்டியில் அக்டோபர் 21 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகின் அப்ரிடி இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என கருதப்படுகிறது. ஏனென்றால் கடந்த ஆண்டு உலகக்கோப்பை தொடரில் இந்தியாவின் பேட்டிங்கை நிலைகுலைய வைத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

இந்நிலையில் அவரின் ஓவரில் தடுப்பாட்டம் ஆடி விக்கெட்டை காப்பாற்ற வேண்டும் என்று ஆடாமல், அடித்து ஆட வேண்டும் என முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் கம்பீர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் “டி 20 போட்டிகளில் எப்படியும் நீங்கள் அவுட் ஆகாமல் இருக்க முடியாது. அதனால் அவுட் ஆகிவிடுவோமோ என அஞ்சாமல் அடித்து ஆட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments