Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உள்ளூர் போட்டிகளில் தோனி விளையாட வேண்டும் – அதிகமாகும் அழுத்தம் !

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (08:00 IST)
கடந்த சில மாதங்களாக பார்மில் இல்லாத தோனி மீண்டும் பழைய ஆட்டத்திறனுக்கு வருவதற்காக உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என முன்னாள் வீரர்கள் அறிவுரை கூறி வருகின்றனர்.

தோனி தேசிய அணிக்கு தேர்வானது 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம். அன்றிலிருந்து இன்று வரை தோனி எப்போது அவு ஆஃப் பார்ம் எனக் காரணம் காட்டி அணியில் இருந்து ஓரங்கட்டப் படவில்லை.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்ட தோனி தற்போது டி20 போட்டிகளிலும் ஓய்வு என்ற பெயரில் ஓரங்கட்டப்படு விட்டார். ஒரு நாள் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் அவருக்கு கடந்த அக்டோபர் மாத போட்டிகளுக்குப் பிறகு அடுத்தாண்டு ஜனவரியில்தான் மீண்டும் சர்வதேசப் போட்டி.

மூன்று மாதகாலம் ஓய்வில் இருக்கும் தோனி இந்த காலத்தில் உள்ளூர் போட்டிகளில் கவனம் செலுத்தி தனது ஃபார்மை மீட்டுக் கொண்டுவரவேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். முன்னாள் இந்தியக் கேப்டன் கவாஸ்கர் ‘தேசிய அணியில் இல்லையென்றால், உள்ளூர் போட்டிகளில் விளையாடமாட்டார்களா?’ எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

எப்படியும் அடுத்தாண்டு நடக்க இருக்கும் உலகக்கோப்பை ஆட்டத்தோடு ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படும் தோனி தனது அந்திமக் காலப் போடிகளில் சிறப்பாக விளையாண்டு தனது ரசிகர்களை முழுமையாகத் திருப்திபடுத்த வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சக்கர நாற்காலியில் வந்து வீரர்களுக்கு ஆலோசனைக் கொடுத்த டிராவிட்!

கடந்த ஒராண்டில் ஸ்ரேயாஸின் வளர்ச்சி… கங்குலி பாராட்டு!

ஊசிக்கு ஊசி எதிர்முனை பாயுமா? இன்று KKR - RR தீவிர மோதல்! முதல் வெற்றி யாருக்கு?

ஹெட் & அபிஷேக் ஷர்மாவ விட இவங்கதான் ஆபத்தான தொடக்க வீரர்கள்.. சுரேஷ் ரெய்னா பாராட்டு!

என் சதம் முக்கியமில்ல.. அடிச்சு தூள் கிளப்பு – அணி வீரருக்கு உத்வேகம் கொடுத்த ஸ்ரேயாஸ் ஐயர்!

அடுத்த கட்டுரையில்
Show comments