Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெஸ்ட் மேட்சில் தலைதூக்கிய இனவெறி..இந்திய வீரர்கள் புகார்

டெஸ்ட் மேட்சில் தலைதூக்கிய இனவெறி..இந்திய வீரர்கள் புகார்
, சனி, 9 ஜனவரி 2021 (22:08 IST)
சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டில் பங்கேற்று விளையாடும் போது, இந்திய வீரர்கள் பும்ரா, சிராஜை இன ரீதியாக இழிவு படுத்தியதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி ஆஸ்திரெலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது., ஒருநாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.

டி-20 தொடரில் 2-1 என்ற கணக்கில் வென்றது.

தற்போது 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இளம் வீரர்களைக் கொண்ட ரஹானே அணி 1-1 என்ற கணக்கில் உள்ளது.

வெற்றி யார் என்பதை தீர்மானிக்கும்  3 வது டெட் நடைபெற்று வருகிறது., இந்நிலையில். முதல் இன்னிங்ஸில் ஆஸ்.,, அணி 338 ரன்கள் எடுத்தது, இந்திய் அணி 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 3 ஆம் நாள் முடிவில் 197 ரன்கள் ஆஸ்திரேலியா முன்னிலையில் இருந்தது. 2 வது இன்னிங்ஸில் 103 ரன்கள் எடுத்துள்ளது.( 29ஓவர் - 2விக்கெட்).

இந்நிலையில் 2 வது மற்றும் 3 வது நாள் ஆட்டத்தின் போது மைதானத்தில் வேகப்பந்து வீச்சாளர்களான பும்ரா , சிராஜ் ஆகிய இருவரையும் இனரீதியாக ரசிகர்கள் திட்டியதாகத் தெரிகிறது.

எனவே இருவரும் நடுகள அம்பயரிடம் புகாரளித்தனர். இந்திய வீரர்களை விமர்சித்த  ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கடைசியில் சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள் – 244 ரன்களுக்கு ஆல் அவுட்!